Breaking News

பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் வாசிக்கும் கருவி

வேலூர், ஆக.11-

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி  திட்டத்தில் பயன்பெற தகுதியான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


இத்திட்டத்தினை குறித்து மேலும் தெரிவித்துள்ளது, வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளிகளில் இளநிலை கல்வி முடித்தவர், முதுநிலை கல்வி பயின்று வருபவர்கள் மற்றும் TET, TNPSC   போன்ற போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு,  பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி (Electronic Braille Reader)    திட்டத்தில் பயன்பெற கீழ்க்காணும் சான்றுகளுடன்  வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய படிவத்தில், விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

1.மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், 2.புகைப்படம், 3.இளங்கலை கல்வி முடித்தமைக்கான சான்று, 4.முதுநிலை படிக்கும் சான்று நகல், 5.ஆதார் அட்டை நகல்


No comments

Thank you for your comments