Breaking News

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இரவு காவலர் பணி அறிவிப்பு

திருவள்ளுர், ஆக.11-

திருவள்ளுர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு, இரவு காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


திருவள்ளுர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு இரவு காவலர் பணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நிர்ணயம் செய்யப்படும்.

தினக்கூலி அடிப்படையில், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) பெண் (ஆதரவற்ற விதவை) முன்னுரிமை அடிப்படையில் ஒரு நபர் நியமனம் செய்யப்படவுள்ளார். 

குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். 

18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் எழுத்துப்பூர்வமான சுயவிவர விண்ணப்பத்துடன் தங்களது கல்வி சான்று, சாதி சான்று நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கவேண்டிய முகவரி: 

உதவி இயக்குநர், 

முன்னாள் படைவீரர் நல அலுவலகம், 

6/25 லால் பகதூர் சாஸ்திரி தெரு, 

பெரியகுப்பம், 

திருவள்ளுர்-602001,

தொலைபேசி : 044-29595311 

என்ற முகவரிக்கு  விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.08.2021 என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments