சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம்
வேலூர், ஆக.11-
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பெங்களூர்&சென்னை அதிவேக நெடுஞ்சாலை திட்டம் பேஸ்-III சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வள்ளிமலை பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள பெங்களூர்- சென்னை அதிவேக நெடுஞ்சாலை திட்டம் பேஸ்-III சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம், வள்ளிமலை தனியார் மண்டபத்தில் நேற்று (10.08.2021) நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டார். மேற்படி சாலை அமைப்பதன் விளைவாக ஆகும் நன்மைகள் பற்றி துறை அதிகாரிகள் எடுத்துக் கூறினர். இதனை தொடர்ந்து சாலை செல்லும் கிராமப் பகுதிகளில் வரைபடம் வாயிலாக பொதுமக்கள் அந்தச் சாலை செல்லும் பாதையினை அறிந்து கொள்ளும் வகையில் வரைபடம் அங்குள்ள கிராம அலுவலகங்களிலும் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களிலும் வைக்கப்பட வேண்டும்.
மேலும் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் இழப்பீடுகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனுக்குடன் நில உடமைதாரர்களுக்கு வழங்கிட வேண்டும். பாதிக்கப்படும் நிலங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இழப்பீடு தொகை போதாது என கருதினால் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
இந்நிகழ்வினில் மாவட்ட வருவாய் அலுவலர் க.இராமமூர்த்தி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் நிலையெடுப்பு திட்ட இயக்குநர், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments