தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு சேதம்! தேசிய ஆணைக்குழு தலைவரிடம் கோரிக்கை மனு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்து காணப்படுவதால் புதிய குடியிருப்புகள் அமைத்து தரக்கோரி தூய்மைப் பணியாளர் தேசிய ஆணைக்குழு தலைவர் வெங்கடேசனிடம் தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு 1983 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டன. இந்த குடியிருப்புகளில் 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
1983ஆம் ஆண்டு கட்டிக் கொடுக்கப்பட்ட இந்த குடியிருப்புகள் பெரும்பாலனவை சேதமடைந்து காணப்படுகின்றன.
இந்நிலையில், தூய்மைப் பணியாளர் தேசிய ஆணைக்குழு தலைவர் வெங்கடேசன் மேற்கண்ட குடியிருப்புப் பகுதியில் ஆய்வு செய்தார்.
அப்பொழுது அங்கு குடியிருந்த தூய்மைப் பணியாளர்கள் இங்குள்ள வீடுகள் சேதமடைந்து காணப்படுவதாகவும், தங்களுக்கு புதிய குடியிருப்புகள் அமைத்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும், எங்களுக்கு குடியிருப்பு பட்டா இதுவரை வழங்கவில்லை. எனவே பட்டா வழங்குமாறும் தலைவர் வெங்கடேசனிடம் தூய்மைப் பணியாளர்கள் மனு அளித்தனர்
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து குடியிருப்புகள் புதுப்பித்தல் பற்றி முடிவு எடுக்கப்படும் என தூய்மைப் பணியாளர்கள் தேசிய ஆணைக்குழு தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments