Breaking News

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் கீழ் மானியத்துடன் மீன் வளர்ப்புக்கு அழைப்பு

கடலூர், ஆக.11-

தேசிய வேளாண் அபிவிருத்திதிட்டம் (NADP)    மீன்வளர்ப்பினை விரிவுபடுத்திட மானியம் வழங்குப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.


தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2021-22ன் கீழ்கடலூர் மாவட்டத்தில் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகள் ஒருஹெக்டேருக்கு ரூ.7.00 இலட்சம் செலவு செய்து மீன்குளம் அமைத்திட 50 சதவீதம் மானியமாக ரூ.3.50 இலட்சம் மற்றும்

ஒரு ஹெக்டேர் நீர்ப்பரப்பில் மீன்வளர்ப்பு செய்திட ஆகும் உள்ளீட்டு செலவினத்திற்கான தொகை ரூ.1.50 இலட்சத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ.60,000/- மானியமாக வழங்கப்படும். 

மேற்படி இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள மீனவ விவசாயிகள் கீழ்காணும் முகவரியில் விண்ணப்பங்களை பெற்று தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.  

மீன்வளம்  மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்,  ரேவு மெயின் ரோடு,  கடல் உயிரியல் அண்ணாமலை பல்கலைக்கழகம் எதிரில், பரங்கிப்பேட்டை (அஞ்சல்),  புவனகிரி (வட்டம்), 608 502. 

மேலும் தகவலுக்கு அலுவலக தொலைபேசி எண். 04144-243033, கைப்பேசி எண். 9384824252 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.  

இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:19.08.2021. 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்


No comments

Thank you for your comments