Breaking News

ஐடிஐ - அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்...

வேலூர்:

வேலூர், அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழற்கல்வி பயிற்சியில் சேர்ந்து பயில விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் FITTER, ELECTRICIAN, TURNER,  MACHINIST, MECHANIC MOTOR VEHICLE, DRAUGHTSMAN CIVIL ஆகிய தொழிற்பிரிவுகளிலும்,

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் WIREMAN, WELDER, SHEET METAL WORKER, CARPENTER, LEATHER GOODS MAKER,   FOOTWEAR MAKER,

ஆகிய தொழிற்பிரிகளில் சேர 04.08.2021ம் தேதிக்கும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி காலத்தில் மாதம் ரூ.750/- உதவிதொகை, லேப்டாப், சைக்கிள், பாடப்புத்தகம், சீருடை, காலணி வழங்குவதுடன், பயிற்சி முடித்தவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி மற்றும் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். 


மேலும் விவரங்களுக்கு 0416-2290848 தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு அசல் கல்வி சான்றுகளுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், அவர்கள் தெரிவித்துள்ளார்.     

இதேபோன்று, ஈரோடு மாவட்டத்தில்,  முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு 0424-2275244 மற்றும் உதவி இயக்குநர், மாவட்டதிறன் பயிற்சி அலுவலகம், ஈரோடு 0424-2270044 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

8-ஆம் வகுப்பு /  10 -ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்  (2021 ஆம் ஆண்டு 10 -ஆம் வகுப்பு முடித்தவர் எனில் 9-ஆம் வகுப்புமதிப்பெண் சான்றிதழ்), 

மாற்றுசான்றிதழ், 

சாதிசான்றிதழ், 

ஆதார் அட்டை, 

Passport Size Photo

மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் மேற்காணும் ஆவணங்களை நேரில் எடுத்துவரவும். இந்த நல்லவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு ஈரோடு மாவட்டஆட்சியர் ஹச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் தெரிவித்துள்ளார்.  

அதிகார பூர்வ இணையதளம் விண்ணப்பிக்க ...

No comments

Thank you for your comments