Breaking News

காட்பாடி பகுதியில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் வி.ஜி.ராவ் நகர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக ஆங்காங்கே இருசக்கர வாகனம் திருட்டு போவதாக காட்பாடி  காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணமே இருந்தது.



காட்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி ஆலோசணையின் படி காவல் ஆய்வாளர் ஜெ.ஆனந்தன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் மற்றும் போலிஸார் உதவியுடன் காட்பாடி முக்கிய சந்திப்பு பகுதியான கேலக்ஸி திரையங்கம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


இந்நிலையில், இன்று காலை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காட்பாடி வி.ஜி.ராவ்  நகர் பகுதியை சேர்ந்த சுந்தர் ( எ) வெள்ளை (36) என்கிற வாலிபரை போலீசார் விசாரித்தபோது காட்பாடி வி.ஜி.ராவ் நகர் பகுதியில் சுமார் ஏழு வண்டிகளை  திருடி விற்பனை செய்தது தெரிய வந்தது.

 இதனையடுத்து காட்பாடி போலீசார் சுந்தர் என்கிற வெள்ளையை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

No comments

Thank you for your comments