Breaking News

கல்லூரிகள் திறப்பது எப்போது?- அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை:

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகான பணிகள் ஆகஸ்ட் 1ம் தேதி திட்டமிட்டபடி தொடங்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் பொன்முடி, கல்லூரிகளை திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முதலமைச்சர் முடிவு செய்வார் என கூறியுள்ளார்.


தலைமைச்  செயலகத்தில், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

உயர்கல்வித்துறை வளர்ச்சி தொடர்பாக ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்ததாகவும், பல்கலைக்கழகங்களுடன் 83 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.


No comments

Thank you for your comments