கல்லூரி நிர்வாகம் அபராதம் என்ற பெயரில் வசூல் வேட்டை... மாணவர்கள் போர்கொடி...
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஸ்காட் கல்லூரியில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாக நுழைவு வாயில் முன் அமர்ந்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவிலில் ஸ்காட் கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாக நுழைவு வாயில் முன் அமர்ந்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கல்லூரி நிர்வாகம் அபராதம் என்ற பெயரில் மாணவ-மாணவிகளிடம் இருந்து தேவையில்லாமல் பணம் வசூல் செய்வதாக கூறி கோஷம் எழுப்பினர். மேலும், இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
No comments
Thank you for your comments