முக கவசம் அணியாமல் பயணித்தவர்களுக்கு அபராதம்
நாகர்கோவில்:
கொரோனாவின் 2வது அலை வீச தொடங்கி உள்ளது. இதனால் கொரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஆனால் பொதுமக்கள் கொரோனா பயமின்றி சமூக இடைவெளியை சரிவர கடைபிடிப்பதில்லை... அதனால் கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பில் கடுமை காட்டி வருகின்றனர் அதிகாரிகள்.
நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் இன்று காலை முக கவசம் அணியாமல் மினி பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
No comments
Thank you for your comments