கன்னியாகுமரியில் தேர்தல் விழிப்புணர்வு கேக் கண்காட்சி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்துநிலையத்தில் மாவட்ட அனைந்து பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய தேர்தல் விழிப்புணர்வு கேக் கண்காட்சியை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் துவக்கி வைத்து பார்வையிட்டர். அதை தொடர்ந்து வடசேரி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் மருத்துவர் செந்தில்குமார், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் மைக்கிள் அந்தோணி பெர்னாட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
======================================================================

No comments
Thank you for your comments