குமரிமாவட்டதில் சட்டவிரோதமான செயல்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ. பத்ரி நாராயணன் அவர்கள் சமுதாயத்தை சீரழிக்கும் சட்டவிரோத செயல்களான கொலை, அடிதடி, திருட்டு, விபசாரம், கள்ளநோட்டு போன்ற செயல்களையும், கஞ்சா, மது, குட்கா, புகையிலை பொருட்கள் ஆகியவற்றை தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தேர்தல் நேரத்தில் மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறா கண்காணிக்க காவல் துறையினர்க்கு உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அருளப்பன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தக்கலை பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது அவர் முளகுமூடு பகுதியை சேர்ந்த தாசன் S/O சூசை மரியான் என்பதும், அவரை சோதனை செய்த போது அவர் 500 ரூபாய் 20 நோட்டுகள் என பத்தாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் வைத்திருந்ததை கண்டுபிடித்தார்.
பின்பு அவர்மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
No comments
Thank you for your comments