Breaking News

சட்டபேரவைத் தொகுதிகளில் போட்டியிட 15 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்

தருமபுரி, மார்ச் 18-

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சட்டபேரவைத் தொகுதிகளில் போட்டியிட நேற்று 15 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதில் தருமபுரி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணி நேற்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கோ.வி. சிற்றரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராஜ் இருந்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தருமபுரி திமுக சட்ட மன்ற வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணி தருமபுரி மாவட்டம் விவசாயத்தை நம்பியிருக்கிற மக்கள் அதோட மட்டுமல்லாது இது மிகவும் பின் தங்கிய மாவட்டம் இங்கு சிப்காட் கொண்டு வந்து மக்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவேன், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மாவட்டத்தின் கடைசி எல்லை வரை கொண்டு வருவேன் என தெரிவித்தார்.

இதே போன்று தருமபுரி மாவட்டம்,  பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரபு ராஜசேகர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்ட மடன்ற தொகுதி செயலாளர் தமிழ்அன்வர், திமுக ஒன்றிய செயலாளர் சித்தார்தன் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments