ஒரே தொகுதிக்கு 2 காங்கிரஸ் வேட்பாளர்கள்.... தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் தியாக நீதிராஜன் வேட்புமனு தாக்கல் - நிர்வாகிகள் குழப்பம்
விருத்தாசலம், மார்ச் 17-
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்படாத காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், வேட்பாளர் எனக் கூறி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக ஏற்கனவே கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணனை கட்சி தலைமை அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று அதே கட்சியை சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் தியாக நீதிராஜன் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சுமார் 3000-க்கும் மேற்பட்டோருடன் நடைபயணமாக சென்று விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவின்குமரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் அந்தந்த கட்சி சார்பில் அளிக்கப்படும் படிவம் எ என்ற பிரமாண பத்திரத்தையும் சமர்பிக்க வேண்டும். இந்த நிலையில், நீதிராஜன் அந்த படிவம் இல்லாமலேயே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து கூறிய அவர், விரைவில் கட்சி சார்பில் அளிக்கப்படும் படிவத்தை சமர்பிப்பேன் என்றார்.
இதனால் இப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது மேலும் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது
No comments
Thank you for your comments