நோயாளியை அடித்து உதைத்த பெண் மருத்துவர்
சீனா, மார்ச் 16-
சீனாவில் உள்ள மங்கோலியா புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம்
நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அங்குள்ள மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்
ஒருவர் மருத்துவ கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லை என தெரிவித்ததாக
கூறப்படுகிறது.
இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மருத்துவர் அறுவைசிகிச்சை அறையிலேயே, அந்த பெண்மணியை கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு மருத்துவர் கண்டும் காணாதது போன்று இருந்துள்ளார்.
அறுவைசிகிச்சை அறையிலேயே நோயாளியிடம் அதிக பணம் கேட்டு தாக்குதல்
நடத்துவது கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையடிப்பது போன்ற மருத்துவர்களின்
இந்த கொடூர செய்கைகளை அறிந்த பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் கத்தியுடன் இருக்கும் ஒரு மருத்துவர் என்ன வேண்டுமானால்
செய்யலாம், கொடிய மகப்பேறு மருத்துவமனைகளுக்கு இது ஒரு சான்று எனவும்
பொதுமக்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
No comments
Thank you for your comments