Breaking News

திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம்

திருவண்ணாமலை, மார்ச் 12-
திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கத்தின் மீதான கலால் வரியை திரும்ப பெறக்கோரி கடையடைப்பு போராட்டத்தில் நகைக்கடை உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 3-வது நாளாக நேற்றும் கடையடைப்பு போராட்டம் தொடர்ந்தது. அந்த போராட்டத்தை புறக்கணித்து 2 பிரபல நகைக்கடைகள் நேற்று திறக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த
தி.மலை நகைக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் வடிவேல் தலைமையில் நிர்வாகிகள், திறக்கப்பட்ட கடைகளுக்கு சென்று கடையை மூட வேண்டும் என்றுவலியுறுத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் வாக்குவாதம் நடைபெற்றது.

அதன்பின்னர், திறக்கப்பட்டிருந்த கடைகள் மூடப்பட்டது. இதையடுத்து
நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Thank you for your comments