Breaking News

300 ஆண்டுகளாக திணறடித்த கணிதப் புதிர்... விடை கண்டுபிடித்த பேராசிரியருக்கு ரூ. 4.5 கோடி பரிசு!

லண்டன், மார்ச் 18-
300 ஆண்டுகளுக்கு முந்தைய கணிதப் புதிர் ஒன்றிற்கு விடை கண்டுபிடித்த இங்கிலாந்து பேராசிரியருக்கு, நார்வே நாட்டு அறிவியல் அகாடமி ரூ.4.5 கோடி பரிசு வழங்க உள்ளது.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கணிதப் புதிர் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு யாராலும் விடை காண இயலவில்லை.

தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளாக அந்தக் கணிதப் புதிருக்கு விடை தேடப்பட்டு வந்தது. இந்த கணித புதிருக்கு விடை கண்டு பிடித்தால் பெரிய அளவில் பரிசு வழங்கப்படும் என்று 1994-ம் ஆண்டு நார்வே நாட்டு அறிவியல் அகாடமி அறிவித்திருந்தது.

இந்நிலையில், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ வில்ஸ். இவர் தற்போது இந்தப் புதிருக்கு விடையைக் கண்டுபிடித்துள்ளார்.

இதனால், அறிவித்தபடி, இந்தப் பேராசிரியருக்கு நார்வே நாட்டு அறிவியல் அகாடமி ரூ. 4.5 கோடி பரிசு வழங்க முடிவு செய்துள்ளது.

No comments

Thank you for your comments