Breaking News

"டியூப் லைட்" வேண்டாம் “எல்.இ.டி” போதும் - 421 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமித்து சாதித்த ஆந்திரா

Andhra Pradesh saves 421 million unit power using LED bulbவிஜயவாடா, பிப்.22:
ஆந்திராவில் எல்.இ.டி விளக்குகளை மக்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்ததன் மூலமாக அங்கு மின்சார உபயோகம் குறைந்து அதிகளவில் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் மின்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் எல்.இ.டி பல்புகளை அதிகளவில் பயன்படுத்த மின்சார வாரியம் சார்பாக மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

அங்குள்ள 13 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் எல்.இ.டி பல்புகளை அரசு புழக்கத்திற்கு கொண்டு வந்தது. இதன் பயனாக சென்ற ஆண்டில் 421 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமித்துள்ளதாக அம்மாநிலம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அங்கு எடுக்கப்பட்ட சர்வேயில் ஆந்திர அரசு 57.03 லட்சம் எல்.இ.டி பல்புகளை மக்களுக்கு வினியோகித்துள்ளது. இதனால் மின்சார உபயோகம் பெருமளவில் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments