தேர்தல் நெருங்கும் நிலையில் 21 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு
சென்னை, பிப்.17:
விரல்ரேகைப் பிரிவில் பணியாற்றும் 21 பேருக்கு பதவி உயர்வு
வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், பதவி உயர்வை அளித்து தமிழக அரசின்
உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இவர்களின் விவரம்: கன்னியாகுமரி ஏ.எம்.ஜோதி, புதுக்கோட்டை எம்.ஹேமா,
சென்னை ஆர்.மாலதி, ஜி.கிருஷ்ணமூர்த்தி, வி.பஞ்சாட்சரம்,ஈரோடு டி.சங்கீதா,
திருவண்ணாமலை ஆர்.சுந்தரராஜன், நாமக்கல் ஆர்.ரஞ்சனி ஆகிய 8 பேர் அந்தந்த
மாவட்டங்களிலேயே கைரேகைப் பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மற்ற 13
பேரும் வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்
ஓரிரு நாள்களில் பொறுப்பை ஏற்க உள்ளனர்.
No comments
Thank you for your comments