Breaking News

“படுநெல்லி இரட்டைக் கொலை வழக்கு!” - மேலும் 5 பேர் அதிரடி கைது: கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

 காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 19, 2026

காஞ்சிபுரம் மாவட்டம் B5 பொன்னேரிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படுநெல்லி கிராமத்தில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் இரு இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் 5 பேரைத் தனிப்படை   கைது செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு & முதல் எதிரி கைது:

கடந்த 17.08.2026 அன்று படுநெல்லி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அதே ஊரைச் சேர்ந்த சந்திரசேகர் (27) மற்றும் நீலகண்டன் (27) ஆகிய இரு இளைஞர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

ஆவணி மாத ராசி பலன்கள் 2026
[ ஆக.18  முதல் செப்.17 வரை ]
"சூரியன் ஆட்சி, குரு உச்சம்! 
கன்னியில் புதன் உச்சம்,  துலாமில்
சுக்ரன் ஆட்சி

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு யோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

இக்கொலை சம்பவம் தொடர்பாக B5 பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் குற்ற எண். 234/2026, BNS 103(1) (பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தன்றே (17.08.2026) முக்கிய எதிரியான படுநெல்லியைச் சேர்ந்த பகவதி (24) (த/பெ ரகு) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

மேலும் 5 பேர் கைது - நீதிமன்றக் காவலில் அடைப்பு:

இக்கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை పోలీసులు தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், 18.08.2026 அன்று தலைமறைவாக இருந்த மேலும் 5 பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விவரம்:

  1. நாகராஜ் (21) - த/பெ. ஏழுமலை
  2. கிரி (22) - த/பெ. ராமு
  3. கலைச்செல்வன் (19) - த/பெ. கருணாகரன்
  4. புஷ்பராஜ் (29) - த/பெ. ஆறுமுகம்
  5. பிரபாகரன் (26) - த/பெ. கணபதி

கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு (Judicial Custody) உட்படுத்தப்பட்டனர். இதன் மூலம் படுநெல்லி இரட்டைக் கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

No comments

Thank you for your comments