“e-NAM திட்டத்தில் ₹1.18 கோடி வரவு!” - உத்திரமேரூர் நெல் சேமிப்புக் கிடங்கில் காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகா நேரில் ஆய்வு!
காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 07, 2026
e-NAM திட்டத்தின் செயல்பாடுகள் ஆய்வு:
உத்திரமேரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய வேளாண் சந்தை (e-NAM) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
- கொள்முதல் விவரம்: கடந்த 01.04.2026 முதல் 05.08.2026 வரையிலான காலக்கட்டத்தில், இத்திட்டத்தின் மூலம் 671 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்குப் பணப் பரிமாற்றம்: 280-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1.18 கோடி நேரடியாக அவர்களின் வங்கிச் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
- இன்றைய நெல் விலை: தினசரி வரத்துகள் மற்றும் அன்றைய நெல் விலைகளை ஆட்சியர் கேட்டறிந்தபோது, CO-51 ரக நெல்லிற்கு அதிகபட்ச விலையாக 75 கிலோவிற்கு ரூ.2,010 வரை விலை கிடைப்பது தெரியவந்தது.
e-NAM திட்டம் விவசாயிகள் பயனடையும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகப் பாராட்டு தெரிவித்த ஆட்சியர், அதிக அளவிலான விவசாயிகளை இதில் இணைத்து பயன்பெறச் செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நுகர்பொருள் வாணிபக் கழக நெல் சேமிப்புக் கிடங்கு ஆய்வு:
தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெல் சேமிப்புக் கிடங்கைப் பார்வையிட்ட ஆட்சியர் சினேகா, அங்குப் பாதுகாக்கப்பட்டு வரும் நெல் மூட்டைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது உடனிருந்த அதிகாரிகள்:
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு. எஸ். சுரேஷ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணைப் பதிவாளர் / மண்டல மேலாளர் திரு. அ. முருகானந்தம், துணை மண்டல மேலாளர் திரு. இரத்தினவேலு, உத்திரமேரூர் வட்டாட்சியர் திரு. நடராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


No comments
Thank you for your comments