காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்: "சுகாதார நிபுணர்களின் கருணை சோர்வும் மருத்துவ மனிதமும்!"
காஞ்சிபுரம் | ஜூலை 25, 2026
கருத்தரங்கின் நோக்கம் & முக்கியத்துவம்:
இக்கருத்தரங்கு காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
முக்கிய நோக்கம்: மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் நீண்டகால நோய்களின் (Chronic Health Diseases) துயர் தணிப்பில் ஈடுபடும்போது அவர்களுக்கு ஏற்படும் 'கருணை சோர்வு' (Compassion Fatigue) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் மனநலப் பாதுகாப்பையும் சேவைத் திறனையும் மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாகும்.
நிகழ்ச்சித் தொடக்கம் மற்றும் தலைமைகள்:
- தொடக்கவுரை: மருத்துவமனையின் இயக்குநர், பேராசிரியர் மரு. எஸ். சரவணன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
- தலைமை உரை: அறுவை புற்றுநோயியல் துறைத்தலைவர், பேராசிரியர் மரு. சுப்பையா சண்முகம் தலைமை தாங்கினார்.
- ஒருங்கிணைப்பு: புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மூத்த உதவிப் பேராசிரியருமான மரு. T.D. பாலமுருகன் இக்கருத்தரங்கை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார்.
சிறப்புரைகள் & செயல்முறைப் பயிற்சி (Workshop):
மருத்துவ நிபுணர்கள் மற்றும் மனநலத் துறைச் சார்ந்த அறிஞர்கள் பலர் பங்கேற்றுச் சிறப்பு விரிவுரைகளை வழங்கினர்:
- சிறப்புரை: சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மரு. எம். மலையப்பன் சிறப்புரையாற்றினார்.
- விரிவுரைகள்: காஞ்சிபுரம் மனநல மருத்துவர் மரு. மரியா ஆண்டனி மற்றும் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய் உளவியல் துறைத் தலைவர் முனைவர் சுரேந்திரன் வீரையா ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.
- பணிமனை (Workshop): லயோலா கல்லூரியின் முனைவர் டி. கிறிஸ்டியானா தலைமையில், அண்ணா புற்றுநோய் மருத்துவமனையின் புற்றுநோயர் உளவியல் துறை டாக்டர் சதிஷ் மற்றும் திருமதி ஜெயஸ்ரீ இணைந்து சுகாதார வல்லுநர்களுக்கு மன அழுத்த மேலாண்மை குறித்த செயல்முறைப் பயிற்சியை நடத்தினர்.
நிகழ்வின் நிறைவு:
இந்நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார நிர்வாகிகள் எனச் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நிறைவாக, உள்ளுறை மருத்துவர் மரு. சிவகாமி நன்றி உரை ஆற்றினார்.

No comments
Thank you for your comments