காஞ்சிபுரம் மாநகராட்சியில் விழிப்புப்பணித் துறை அதிரடிச் சோதனை! 6 பேரிடம் கணக்கில் வராத பணம் பறிமுதல் - சொந்த GPay மூலம் ரூ.4.38 லட்சம் சுருட்டிய பில் கலெக்டர்!
காஞ்சிபுரம் | ஜூலை 04, 2026
இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி கலைச்செல்வன் தலைமையில், ஆய்வாளர் கீதா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
6 பணியாளர்களிடம் சிக்கிய கணக்கில் வராத பணம்:
மதியத்திற்கு மேல் தொடங்கிய இந்தச் சோதனையின் போது, அலுவலகத்தின் முக்கியக் கணக்குப் பதிவேடுகள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அங்குப் பணியில் இருந்த ஊழியர்களின் உடைமைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.
- இந்த அதிரடி சோதனையில், மாநகராட்சியில் பணிபுரியும் 6 பணியாளர்களிடமிருந்து கணக்கில் வராத ரூ.37,710 ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- இந்தத் தொகை குறித்து ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொந்த GPay கணக்கு மூலம் ரூ.4.38 லட்சம் முறைகேடு:
இந்தச் சோதனையில் மிக முக்கிய அதிர்ச்சிகரமான தகவலாக, மாநகராட்சி பில் கலெக்டர் (Bill Collector) ஒருவர் அரசு விதிகளை முற்றிலுமாக மீறிச் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
"பொதுமக்களிடம் இருந்து பெற வேண்டிய சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்ட அரசு கட்டணங்களை, மாநகராட்சி கணக்கில் செலுத்தாமல், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தனது சொந்த ஜி-பே (GPay) எண் மூலம் முறைகேடாக ரூ.4,38,605 வரை பணப் பரிவர்த்தனை செய்துள்ளார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்."
ஊழியர்கள் மத்தியில் பரப்பரப்பு:
அரசு அலுவலகங்களில் டிஜிட்டல் முறைகேடுகள் அதிகரித்து வருவதை இந்தச் சம்பவம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விடிய விடிய நடத்திய இந்த அதிரடித் திடீர் சோதனை, அங்குள்ள பிற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை (Kanchipuram corporation DVAC raid DSP Kalaiselvan Inspector Geetha bill collector GPay fraud case 2026)

No comments
Thank you for your comments