ஈகியர் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்: விருத்தாசலத்தில் விசிக சார்பில் உணர்ச்சிப்பூர்வ நினைவேந்தல்!
விருத்தாசலம் | ஜனவரி 29, 2026
நிழல் சுமந்த நினைவேந்தல்:
விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பாலக்கரை ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை முன்பாக நடைபெற்றது. விசிக மாவட்டச் செய்தித் தொடர்பாளர் சுப்புஜோதி இந்த நிகழ்விற்குத் தலைமை தாங்கினார்.
வீரவணக்க முழக்கம்:
ஈகியர் முத்துக்குமாரின் திருவுருவப் படத்திற்கு விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், தமிழீழப் போராட்டம் மற்றும் முத்துக்குமாரின் தியாகத்தைப் போற்றும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
முன்னிலை வகித்தோர்: மாவட்டத் துணைச் செயலாளர்கள் தென்றல், அபூபக்கர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சாம்ராஜ், சங்கீதா, மகளிர் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் கீதா பார்த்திபன் மற்றும் இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாவட்டச் செயலாளர் அபிராமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பங்கேற்ற நிர்வாகிகள்:
இந்த நினைவேந்தல் நிகழ்வில் நூற்றுக்கணக்கான விசிக நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர். குறிப்பாக:
- வட்டார நிர்வாகிகள்: ஒன்றியச் செயலாளர் திருஞானம், பொருளாளர் எழல்வான்சிறப்பு, வழக்கறிஞர் தன்ராஜ், நகரத் துணைச் செயலாளர் வயலூர் இளங்கோவன்.
- கிளை நிர்வாகிகள்: சாத்துக்கூடல் சக்திவேல், பழனிசாமி, கோபுராபுரம் பாஸ்கர், கு. விஜயகுமார், மதுசூதனன், மேட்டுக்காலணி வீரமணி, மங்களம்பேட்டை தனகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எருமனூர், இருசலகுப்பம், கோமங்கலம், காட்டுபரூர் மற்றும் விஜயமாநகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கட்சித் தொண்டர்கள் முத்துக்குமாரின் தியாகத்தை நினைவுகூர்ந்து முழக்கமிட்டனர்.
செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.
No comments
Thank you for your comments