Breaking News

காஞ்சிபுரத்தில் 7 வட்டாட்சியர்கள் அதிரடி பணியிட மாற்றம்: மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவு!

 காஞ்சிபுரம், ஜன. 12:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக 7 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.



புதிய நியமனங்கள் குறித்த விவரம்:

புதிய பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்ட வட்டாட்சியர்களின் விவரங்கள் (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

வட்டாட்சியர் பெயர்புதிய பணியிடம்பழைய பணியிடம்
மு. நடராஜன்வட்டாட்சியர், உத்தரமேரூர்தனி வட்டாட்சியர், நிலம் எடுப்பு (பரந்தூர் விமான நிலையம் மண்டலம்-3)
எஸ். ரபீக்தனி வட்டாட்சியர்,
நிலம் எடுப்பு (இருங்காட்டுக்கோட்டை சிப்காட்)
வட்டாட்சியர், காஞ்சிபுரம்
ஏ. மோகன்வட்டாட்சியர்,
காஞ்சிபுரம்
தனி வட்டாட்சியர், பேரிடர் மேலாண்மைத்துறை, காஞ்சிபுரம்
கி. வாசுதேவன்வட்டாட்சியர்,
குன்றத்தூர்
தனி வட்டாட்சியர், நிலம் எடுப்பு (பரந்தூர் விமான நிலையம் மண்டலம்-1)
ஆர். சுந்தர்வட்டாட்சியர், உத்தரமேரூர்கேபிள் டி.வி. வட்டாட்சியர், காஞ்சிபுரம்
ஜெ. இந்துமதிவட்டாட்சியர், வாலாஜாபாத்தனி வட்டாட்சியர், நிலம் எடுப்பு (நெடுஞ்சாலைகள் திட்டங்கள்)
ஆர். மோகன்குமார்வட்டாட்சியர்,
பேரிடர் மேலாண்மைத்துறை
வட்டாட்சியர், வாலாஜாபாத்

உடனடி அமல்:

இந்த இடமாற்ற உத்தரவானது உடனடியாக நடைமுறைக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் மாவட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments