Breaking News

பாரம்பரியமும் நவீனமும் இணைந்த பொங்கல்! பிள்ளைப்பாக்கம் திண்ணைப்பள்ளிக் கூடத்தில் சங்கரா கல்லூரி மாணவர்களின் சமத்துவக் கொண்டாட்டம்.


 காஞ்சிபுரம் | ஜனவரி 10, 2026

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் இயங்கி வரும் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் சங்கர மடத்தின் வழிகாட்டுதலில் 'திண்ணைப்பள்ளிக் கூடம்' செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் சிறார்களுக்குக் கலை, கலாச்சாரம் மற்றும் நவீன அறிவியல் கல்வி வழங்கப்பட்டு வரும் நிலையில்,  சனிக்கிழமை அங்குச் சமத்துவப் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

கூடாரவல்லி ரகசியம் | சுக்கிர தோஷம் நீங்கும்…
ஆண்டாள் கேட்ட அக்காராடிசில்! |  @K24AstroTv 

கல்லூரி பேராசிரியர்களின் முன்னெடுப்பு: 

சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர். வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கல்லூரி பேராசிரியர்களும் மாணவர்களும் திண்ணைப்பள்ளிக்கூடச் சிறார்களுடன் இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விழாவில் உரையாற்றிய முதல்வர், சிறார்களின் கலைத் திறமைகளைப் பாராட்டி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகள்: 

சமூக சேவகர் சௌமியா ராமானுஜம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், சங்கரா கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராமத்துச் சிறார்கள் இணைந்து சிலம்பம், கரகம் உள்ளிட்ட பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர். முன்னதாகப் பேராசிரியர் ந. அப்பாத்துரை அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) மாணவர்கள், தேசிய மாணவர் படை (NCC) அலுவலர்கள் மற்றும் பிள்ளைப்பாக்கம் கிராம பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். கிராமப்புற சிறார்களுக்குக் கல்வியுடன் பண்பாட்டையும் போதிக்கும் இந்தத் திண்ணைப்பள்ளிக் கூடத்தின் முயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

No comments

Thank you for your comments