Breaking News

விருத்தாசலத்தில் பரபரப்பு: மாற்றுத்திறனாளிகள் சட்ட நகலை கிழித்து எறிந்து போராட்டம்! மோடி அரசுக்கு எதிராகக் கொதித்தெழுந்த 200-க்கும் மேற்பட்டோர்.


 விருத்தாசலம் | ஜனவரி 6, 2026

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இன்று அதிரடிப் போராட்டம் நடைபெற்றது.

சட்ட நகல் கிழிப்பு - போலீசார் தடுப்பு: 

மாநிலக் குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மத்திய பாஜக அரசின் புதிய "வி.பி.ஜி. ராம்ஜி" (VPG Ramji) கொள்கைகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வைச் சீரழிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. போராட்டத்தின் உச்சகட்டமாக, மத்திய அரசின் சட்ட நகல்களை நிர்வாகிகள் கிழித்து எறிந்தனர். இதனைத் தடுத்து நிறுத்த முயன்ற விருத்தாசலம் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அவ்விடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

முக்கியக் கோரிக்கைகள்:

  • வேலைவாய்ப்பு பறிப்பு: பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயலைக் கைவிட வேண்டும்.
  • 100 நாள் வேலைத் திட்டம்: 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்யும் முயற்சியைக் கைவிட்டு, அதனைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
  • உதவித்தொகை: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  • நாசகாரச் சட்டம்: மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பறிக்கும் வி.பி.ஜி. ராம்ஜி சட்ட நகலை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

பங்கேற்ற நிர்வாகிகள்: இந்த ஆர்ப்பாட்டத்தில் விருத்தாசலம் வட்டத் தலைவர் விமலா, வேப்பூர் வட்டத் தலைவர் சக்தி, திட்டக்குடி வட்டத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் வட்டச் செயலாளர்கள் முருகேசன், அபீப் ரஹ்மான் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.


 செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.

 

2026-ம் ஆண்டு: குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை?

| 2026 Career & Finance Horoscope|  @K24AstroTv 



@K24AstroTv 









No comments

Thank you for your comments