Breaking News

விருத்தாசலத்தில் அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு, அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில், கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர்

  • நகர தலைவர் ரஞ்சித் குமார்
  • மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேல்முருகன்
  • மாவட்ட மகளிர் அணி தலைவி லாவண்யா
  • சரசு
  • சட்டமன்ற உறுப்பினர் உதவியாளர் பாஸ்கர்

மேலும் பலரும் பங்கேற்று அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

 

📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)

🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!














No comments

Thank you for your comments