மத்திய பாஜக அரசை கண்டித்து விருத்தாசலத்தில் காங்கிரஸ் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் தலைமை.
விருத்தாசலம் | டிசம்பர் 21, 2025
முக்கிய கோரிக்கைகள்:
தேசிய மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி அமைக்கும் மத்திய அரசின் முயற்சியைக் கைவிட வேண்டும், நேஷனல் ஹெரால்டு வழக்கு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தலைமை:
விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவரும், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவர் தனது கண்டன உரையில், பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கடுமையாகச் சாடினார்.
முன்னிலை மற்றும் பங்கேற்பாளர்கள்:
இந்த ஆர்ப்பாட்டத்தில் விருத்தாசலம் நகர தலைவர் ரஞ்சித்குமார், மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் வேல்முருகன், நெய்வேலி ஸ்டீபன் மற்றும் வட்டார தலைவர்கள் சாந்தகுமார், ராவணன், ராமச்சந்திரன், செம்பேதி சக்திவேல் ராஜன், சுரேஷ், கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெய்சங்கர், ஜெயகுரு, தொகுதி தலைவர் அன்புமணி மற்றும் மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி அரசாயி, துணைத் தலைவி சிவகுமாரி லாவண்யா, எஸ்சி எஸ்டி மாவட்ட தலைவர் செந்தமிழ் செல்வன், மாநில தலைமை பேச்சாளர் ராஜீவ்காந்தி உள்ளிட்ட ஏராளமான மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
✍️ செய்தியாளர் : R. காமராஜ்
📞 தொடர்பு : 9080215691
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
SEO Keywords (Tags):
விருத்தாசலம் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம், எம்.ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, 100 நாள் வேலை திட்டம், கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ், கண்டன ஆர்ப்பாட்டம், Virudhachalam Congress Protest, MLA Radhakrishnan, Congress News Tamil.

No comments
Thank you for your comments