காஞ்சிபுரத்தில் ரூ.17.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் ஆட்சியர் வழங்கினார்
காஞ்சிபுரம், டிச.25:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன்,மாவட்ட வன அலுவலர் ரவிமீனா, கூட்டுறவு சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் கோ.யோகவிஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணவேணி வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் 4 விவசாயிகளுக்கு ரூ.8,54,106 மதிப்பிலான மானியத்துடன் கூடிய விசை உழுவை இயந்திரங்கள், கூரம் வதியூர் மற்றும் முத்தியால்பேட்டை கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக 10 விவசாயிகளுக்கு 8,52,934 மதிப்பிலான பயிர்க் கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள், 5 விவசாயிகளுக்கு 5143 மதிப்பில் வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ.17.12 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக வனவிலங்குளால் சேதமடைந்த கரும்பு விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டுத் தொகையையும் ஆட்சியர் வழங்கினார்.கூட்டத்தில் அரசு அலுவலர்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள்,விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments