Breaking News

விருத்தாசலம் கஸ்பா டேனிஷ் மிஷன் பள்ளி தலைமையாசிரியர் மாற்றம் – பெற்றோர்கள், மாணவர்கள் சாலை மறியல்!


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கஸ்பா டேனிஷ் மிஷன் நடுநிலைப் பள்ளியில் கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமையாசிரியராக பணியாற்றி வந்தவர் கிடியன் எபினேசர் பாக்கியராஜ்.

அவர் 2021ஆம் ஆண்டு இப்பள்ளியில் சேரும் போது மாணவர் எண்ணிக்கை 54 மட்டுமே இருந்தது.

தனது சொந்த முயற்சியிலும் செலவிலும் வேன் மூலம் வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்ததன் மூலம் தற்போது 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் கல்வி பெற்று வருகின்றனர்.

🔹 சேவைச் சாதனைகள்:

தனது சொந்த செலவில் பள்ளியில்

  • கழிப்பறை வசதி,
  • மின்விசிறிகள்,
  • ஸ்மார்ட் கிளாஸ் ரூம்
  • அமைத்ததோடு,
  • காலை உணவு திட்டத்தையும் பள்ளிக்காக பெற்றுத் தந்துள்ளார்.

🔹 மாற்று முடிவு:

சமீபத்தில் A.L.C. நிர்வாகம் தேர்தல் நடைபெற்று, புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தலைமையாசிரியர் கிடியன் எபினேசர் பாக்கியராஜ் பணி மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

🔹 பெற்றோர் மற்றும் மாணவர்களின் எதிர்ப்பு:

இந்த முடிவுக்கு எதிராக, பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து “தலைமை ஆசிரியரை மாற்றக் கூடாது” என முழக்கங்களிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர், நூற்றுக்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் – காட்டுக்கூடலூர் சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

🔹 காவல்துறை நடவடிக்கை:

தகவல் அறிந்த விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)


No comments

Thank you for your comments