தேசியகராத்தே போட்டி - காஞ்சிபுரம் மாணவர்கள் சிறப்பிடம்
காஞ்சிபுரம், நவ.10:
இக்கோவாஷி கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் அண்மையில் ஈரோட்டில் நடைபெற்றது.தமிழகம்,ஆந்திரம்,கர்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 1200க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றிருந்தனர்.
காஞ்சிபுரம் இக்கோவாஷ் அசோசியேஷன் பள்ளியின் தலைமை பயிற்சியாளர் பிரபாகரன் தலைமையில் 7 பேர் பங்கேற்றனர்.இவர்கள் 7 பேரில் முதலிடத்தை இருவரும்,2 வது இடத்தை 5 பேரும் பெற்று காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி 6 ஆம் வகுப்பு மாணவி ஹேமாவதியும், குளோபல் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீ வைகுண்டர் ஆகிய இருவரும் தேசிய அளவில் முதலிடத்தை பெற்றனர். இரண்டாவது இடத்தை காஞ்சிபுரம் குருஷேத்ரா பள்ளி 6 ஆம் வகுப்பு மாணவர் கேசவ்,பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் ரோஹித்,அந்திரசன் மேல்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் ரித்திக், திருக்காலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் முகிலன் ஆகியோரும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களை உலக கராத்தே சங்க நடுவர் சம்பத்குமார்,டிரெடிஷனல் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் செழியன் ஆகியோர் பரிசுக்கோப்பையும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார்கள்.
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
.
No comments
Thank you for your comments