சாலையை தனிநபரிடம் இருந்து மீட்டு தர கோரி ஆர்டிஓ அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை – பரபரப்பு
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது கிராமப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துவிட்டதாகக் குற்றம் சாட்டி, இன்று ஆர்டிஓ அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் சமாதானப்படவில்லை.
இதையடுத்து ஆர்டிஓ அலுவலக நேர்முக உதவியாளர் அந்தோனிராஜ் வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.
📜 மனுவில் கூறப்பட்டிருப்பது:
“கீரம்பூர் கிழக்கு பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இங்குள்ள பொதுப்பாதையை மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் தினமும் பயன்படுத்தி வந்தனர்.ஆனால், தெரு முன்பாக உள்ள சில தனிநபர்கள் அந்த பாதையை ஆக்கிரமித்து, மாடுகளை கட்டி,செல்லும் வழியை மறித்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.”
அவர்கள் இதை பற்றி தட்டிக்கேட்டபோது, மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதுவரை எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
🚨 போராட்டத்தின் தீவிரம்:
போராட்டக்காரர்கள் கூறியதாவது —
“நாங்கள் கொடுக்கும் மனுவை அதிகாரிகள் கவனிக்கவில்லை.மனுவை அலுவலகத்தில் கொடுத்தாலும், அதை டீ கடையில் கொடுத்துடீ, வடை சாப்பிடுவதாகவே அதிகாரிகள் செய்கிறார்கள்” என குற்றம் சாட்டினர்.
இதனால் அப்பகுதியில் ஒரு கட்டத்தில் பதற்றநிலை நிலவியது.
No comments
Thank you for your comments