Breaking News

துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் கண் பரிசோதனை & கண்புரை அறுவைச் சிகிச்சை முகாம்



காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம், தாமல் ஊராட்சியில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தலைமை செயற்குழு உறுப்பினர் எம். எஸ். சுகுமார் அவர்களின் ஏற்பாட்டில், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவைச் சிகிச்சை முகாம் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர், கொள்கை பரப்பு செயலாளர் எழிலரசன் அவர்கள் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

மேலும், தாமல் ஊராட்சி இளைஞர்களுக்கு விளையாட்டு வளர்ச்சிக்காக கைப்பந்து வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.


நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்

  • மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் கே. ஆறுமுகம்
  • மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச் செல்வன்
  • மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ. யுவராஜ்
  • மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார்
  • ஒன்றிய அவைத்தலைவர் மாரிமுத்து
  • ஒன்றிய துணைச் செயலாளர்கள் தாமல் இளஞ்செழியன், எஸ்.வி. ரமேஷ்
  • மாவட்ட பிரதிநிதிகள் பி.என். ரவி, கருணாகரன்
  • பகுதி கழக செயலாளர்கள் திலகர், சந்துரு, தசரதன், வெங்கடேசன்
  • மாநகர இளைஞரணி அமைப்பாளர் ப. சுகுமார்
  • முட்டவாக்கம் மனோகரன்
  • தாமல் ஊராட்சி கழக நிர்வாகிகள்

பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

No comments

Thank you for your comments