குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து ஊராட்சி டிராக்டரை சிறைபிடித்த பொதுமக்கள்
குப்பை மாசு காரணமாக அவதிப்படும் குடியிருப்புகள் — பொதுமக்கள் அதிருப்தி வெடிப்பு
காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட அரப்பனஞ்சேரி குடியிருப்பு பகுதிகளில், நீர்நிலையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுவது கடும் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்திவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுப்பிரமணியம் நகர், அண்ணாமலை நகர், அறிஞர் அண்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள், 4000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், இரவு நேரங்களில் குப்பை கொட்டுதல் மற்றும் தீ வைப்பு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
இதனால்:
- துர்நாற்றம்
- பிளாஸ்டிக் எரிப்பின் கரும்புகை
- மூச்சுத்திணறல், கண் எரிச்சல்
- குழந்தைகள் மற்றும் முதியோருக்கு தீவிர உடல்நல பாதிப்பு
என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உத்தரவுகளை மீறும் ஊராட்சி நிர்வாகம்?
நீர்நிலைகளில் குப்பை கொட்டக்கூடாது என்று உயர்நீதிமன்றம் நேரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தும், கோனேரிக்குப்பம் ஊராட்சி அதே செயல்களை தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கருப்பையுடன் வந்த டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடிப்பு – பரபரப்பு
இந்நிலையில், இன்று காலை குப்பைகளை கொண்டு வந்த ஊராட்சி டிராக்டரை அப்பகுதி மக்கள் தடுத்து வைத்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து:
- ஒப்பந்ததாரர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்
- இனிமேல் நீர்நிலையில் குப்பை கொட்டமாட்டோம் என உறுதியளித்தார்
- அதன்பின் டிராக்டர் விடுவிக்கப்பட்டது
- பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்களின் கோரிக்கை
அப்பகுதி மக்கள் கூறுவது:
“உயர்நீதிமன்ற உத்தரவை மீறி குப்பை கொட்டுவது மிகப்பெரும் குற்றம். உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.”
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
No comments
Thank you for your comments