📰 விருத்தாசலம் அருகே அரசு நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பு – விசிக ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம், அக். 6:
🔸 அரசு நிலம் ஆக்கிரமிப்பு சர்ச்சை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வி.குமாரமங்கலம் கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு புறம்போக்கு நிலம், சில தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
🔸 சமத்துவபுரம் திட்டம் தடைபட்டது
ஆனால் அதை மீறி ஆதிக்க சாதியினர் அந்த இடத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
🔸 நிர்வாகத்தின் நோட்டீஸ் புறக்கணிக்கப்பட்டது
🔸 “ஏழை மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்”
“அந்த அரசு நிலத்தை மீட்டு, வி.குமாரமங்கலம் பகுதியில் வாழும் ஏழை பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.”
🔸 “அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்”
பி.ஆர். நீதிவள்ளல் பேட்டியில் தெரிவித்ததாவது:
“அரசு இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தி, அந்த இடத்தை மீட்டு ஏழை மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
🔸 ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கம்மாபுரம் ஒன்றிய துணை செயலாளர் ராஜ், சந்திரசேகர், சேகர், வெங்கடேசன், மணிகண்டன், சுவிதாசங்கர், சுரேந்தர், சௌந்தர்ராஜன், கார்த்தி, சரத்பாபு, விஜய், கதிர், விக்கி, சூர்யப்பிரகாஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
🎙️ பேட்டி: பி.ஆர். நீதிவள்ளல்
கடலூர் மைய மாவட்ட செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
✍️ செய்தியாளர்: R. காமராஜ் – 📞 9080215691
🎥 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் – 📞 8072117545
No comments
Thank you for your comments