Breaking News

காஞ்சிபுரத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி-ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


காஞ்சிபுரம், அக்.24:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் வாகனத்தை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



வடகிழக்குப் பருவமழையின் போது மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் நிலைகளை உயர்த்தும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு விளம்பர வாகனம் மற்றும் பேரணியை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அப்பேரணியிலும் கலந்து கொண்டதோடு செய்தி மக்கள் தொடர்புத்துறையினரின் விழிப்புணர்வு விளம்பர வாகனத்தின் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்ட விழிப்புணர்வு குறும்படத்தையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

விழிப்புணர்வு பேரணி தொடக்க விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் கோ.செல்வராஜ், உதவி நிர்வாகப் பொறியாளர் ச.நந்தினி, இளநிலைப் பொறியாளர் கோ.முனிகிருஷ்ணன் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர்.

📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  





No comments

Thank you for your comments