Breaking News

இலங்கை சுற்றுலாத்துறை இந்திய பயணிகளை ஈர்க்க மதுரை சென்னை கோவையில் ரோட்ஷோ..

கோவை மாவட்டம்  சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்  இலங்கை சுற்றுலாத்துறை தூதரணி குழு சார்பில் இந்திய பயணிகளை ஈர்க்க மதுரை சென்னை,கோவை ஆகிய நகரங்களில்  ரோட்ஷோ பற்றி செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.


இது குறித்து தூதரணி குழுவை தலைமை வகிக்கும்  விஜித ஹேரத் வெளிநாட்டு தொடர்புகள் அமைச்சர், சுற்றுலா தொடர்பான அமைச்சர், துணை அமைச்சர் ருவான் ரணசிங்கே ஆகியோர்   கூறியதாவது 

இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க  விசா இல்லா நுழைவு வழங்கப் பட்டுள்ளது.நாட்டின் பலவிதமான சுற்றுலா வாய்ப்புகளை இந்தியாவின் முக்கிய சந்தைகளில் வெளிப்படுத்த 2025 அக்டோபர் 6,8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சென்னை நகரங்களில் தொடர்ச்சியான ரோட்ஷோ மற்றும் நெட்வொர்க்கிங் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது 


இந்த தூதரணி குழுவில் 40க்கும் மேற்பட்ட இலங்கை நிபுணர்கள் இந்திய பயணத்துறையுடன் தொடர்பு கொள்ள உள்ளனர் மேலும் தென் இந்தியா எப்போதும் இலங்கைக்கு முக்கியமான சுற்றுலா சந்தையாக இருந்துள்ளது இதற்குப் பிற காரணங்களும் உள்ளன, 

நமது ஆழமான கலாச்சார, மத மற்றும் வரலாற்று தொடர்புகளும் ஆகும்.மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சென்னை நகரங்களில் நடைபெறும் எங்கள் ரோட்சோக்கள் மூலம், இந்த உறவுகளை வலுப்படுத்தி, இலங்கையை சுற்றுலா, MICE மற்றும் ஆன்மீக பயணங்களுக்கு வருட முழுவதும் முன்னுரிமை பெற்ற தலமாக வெளிப்ப டுத்துவதே எங்கள் நோக்கம் 



இந்த நிகழ்வுகளில் ஒவ்வொரு நகரிலும் 200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்திய பயண முகவர்கள், தொழிற்துறையின் முக்கிய நபர்கள் மற்றும் ஊடக தூதர்கள் இலங்கை இந்தியா உறவுகளை வலுப்படுத்த சுற்றுலா துறையில் பயனுள்ள ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த நிகழ்வுகளின் நோக்கம் என்று தெரிவித்தனர்.

📝 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455


No comments

Thank you for your comments