Breaking News

காரமடை ரோட்டரி சங்கம் சார்பாக போலியோ விழிப்புணர்வு பேரணி ..!



இப்பேரணிக்கு காரமடை ரோட்டரி சங்க தலைவர் குமணன் நடராஜன் தலைமையும் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் தீபக்குமார் முன்னிலையும் வகித்தார்கள். 

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காரமடை நகர மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், நகராட்சி ஆணையர் மதுமதி மற்றும் காவல் ஆய்வாளர் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். 

இப்பேரணியில் ரோட்ராக்ட் கிறிஸ்து அரசர் கல்லூரி, ஸ்ரீ குமரன் கல்லூரி, இன்ட்ராக்ட் எஸ்.வி.ஜி.வி.பள்ளி மற்றும் ஸ்ரீ விநாயகா வித்யாலயா பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்று காரமடை நகராட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக தொடங்கி நான்கு ரத வீதிகளிலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி சென்று போலியோ ஒழிப்பை பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். 


நிகழ்வில் உடன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவ சதீஷ்குமார், துணை ஆளுநர் விஜய் பிரபு, முன்னாள் துணை ஆளுநர் மகேஷ், ஐ.பி.பி.சோமசுந்தரம், துணை காவல் ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455


No comments

Thank you for your comments