காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் - ரூ.24.19லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஆட்சியர்
காஞ்சிபுரம், அக்.25:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் 7 விவசாயிகளுக்கு ரூ.14,73,733 மதிப்பிலான மானியத்துடன் கூடிய விசை உழுவை இயந்திரங்கள்,வேளாண்மைத்துறை மூலம் 10 விவசாயிகளுக்கு 9,35,470 மதிப்பிலான பயிர்க்கடன்கள்,5 விவசாயிகளுக்கு ரூ.10,189 மதிப்பிலான வேளாண் இடுபொருட்கள் உட்பட மொத்தம் 22 விவசாயிகளுக்கு ரூ.24.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் விவசாயிகளுக்கு மத்திய,மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கிக் கூறினார்கள்.
விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கும் அந்தந்த துறை சார்ந்த அரசு அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
🌿 மேஷம் முதல் மீனம் வரை | குரு அதிசார பெயர்ச்சி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் ! | தவறாமல் கேளுங்கள் ⚡
💛 புதிய தகவல் இதோ👆

No comments
Thank you for your comments