Breaking News

விருத்தாசலம் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் 1500ஆம் ஆண்டு மீலாது நபி மாநாடு



விருத்தாசலம், அக்டோபர் 26:


நிகழ்ச்சிக்கு நகர ஐக்கிய ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் M. முபாரக் அலி தலைமையில நடைபெற்றது. மவ்லவி ஹாஜி A. சபியுல்லாஹ் மன்பயீ, கடலூர் மாவட்ட ஜமா அத்துல் உலமா சபையின் கவுரவத் தலைவர் துவக்கவுரையாற்றினார்.

ஜனாப் K. சேட்டு முஹம்மது, பொது செயலாளர், நகர ஐக்கிய ஜமாஅத், வரவேற்புரை ஆற்றினார்.

பிரதான சிறப்புரைகளை  மவ்லானா மவ்லவி ஹாஃபிழ் அல்ஹாஜ் அமீருல் உலமா P.A. காஜா முயீனுத்தீன் பாகவி ஹள்ரத், தலைவர், தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை, பேராசிரியர், உஸ்மானியா அரபிக் கல்லூரி, மேலப்பாளையம்,  மற்றும் 

மவ்லானா மவ்லவி ஹாஃபிழ் அல்ஹாஜ் Dr. V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி ஹள்ரத், பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை ஆகியோர் ஆற்றினர்.


அவர்கள் உரைகளில் “மாநபி போற்றிய மகளிர் உரிமைகள்” மற்றும் “சமூகம் எதிர்கொள்ளும் சவால்களும், சர்தார் நபி காட்டிய தீர்வுகளும்” என்ற தலைப்புகளில் விரிவாக விளக்கினர்.



நிகழ்ச்சி நிறைவில் ஜனாப் E. முஹம்மது அப்துல்லா, பொருளாளர், நகர ஐக்கிய ஜமாஅத், நன்றியுரை ஆற்றினார்.

மாநாட்டில் நகரைச் சேர்ந்த பல்வேறு பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

No comments

Thank you for your comments