Breaking News

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் அரசு சார்பில் மூன்று ஜோடிகளுக்கு திருமணம்

 விருத்தாசலம், 14.09.2025

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மூன்று ஜோடிகளுக்கு இன்று (14.09.2025) அரசு திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

🌸🔥 விபூதி யோகம் – வாழ்வை மாற்றும் தெய்வீக ரகசியம் 🙏 #astrology


நிகழ்வின் சிறப்பம்சங்கள்

இந்த விழா, கடலூர் மண்டல இணை ஆணையர் திருமதி ஜோதி மற்றும் உதவி ஆணையர் திரு சந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், விருத்தாசலம் சரக ஆய்வாளர் திருமதி பிரேமா தலைமையில் நடைபெற்றது.

திருக்கோயில் செயல் அலுவலர் மாலா மற்றும் மேளாளர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் திருமணம் சிறப்பாக நடத்தப்பட்டது.

மணமக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள்

திருமண விழாவில் கலந்து கொண்ட மூன்று ஜோடிகளுக்கும், அரசு சார்பில் 4 கிராம் தாலி உட்பட ₹80,000 மதிப்பிலான திருமண சீர்வரிசை

அனுசரணையாக வழங்கப்பட்டது.

பொதுமக்கள் பங்கேற்பு

இந்த விழாவில் மணமக்களின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.

No comments

Thank you for your comments