Breaking News

கல்வி நிலையங்களில் அரசியல் புகுத்த முயற்சியில் ஆர்எஸ்எஸ்-பாஜக ஈடுபட்டு வருவதாக திருமாவளவன் கடும் குற்றச்சாட்டு

 விருத்தாசலம் :

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பொயனப்பாடி ஆண்டவர் கோயிலில், திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு 1063 பெண்கள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திராவிடமணி தலைமையில் நடத்தியது. கலந்துகொண்ட பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, கல்வி நிலையங்களில் ஆளுநர்களை வைத்து சனாதன கொள்கையை பரப்பும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுப்பினார்.

திருமாவளவன்   கூறியதாவது, 

ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் சட்டபூர்வ கடமை வாய்ந்த பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்; ஆனால் சிலர் அதை மீறி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு, மத அடிப்படையில் மக்களுக்கு இடையே முரண்பாடுகளை உருவாக்கி வருவதாகவும், இதன் மூலம் தலித் மக்களிடையே குழப்பம் மற்றும் பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன என்றும் அவர் எச்சரித்தார்.

அவர் தொடர்ந்தபோது, வடமாநிலங்களில் நடந்த சம்பவங்களை ஒப்பிடுகையில், தமிழகத்திலும் சிலரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் மக்கள் நடுவில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்து வருவதாகக் கூறினார். இது மிகவும் ஆபத்தானது என்பதால், உழைக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், மத நம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் தங்களுக்கான அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை தடுப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், திருமாவளவன் கூறியதாவது, திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட தகவல்கள் உண்மையல்ல, தமிழகத்தில் இப்போது ஒரே அணி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக உள்ளது என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

செய்தியாளர்: R.காமராஜ் (9080215691)
ஒளிப்பதிவாளர்: V.வேல்முருகன் (8072117545)


No comments

Thank you for your comments