மங்கலம்பேட்டையில் மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல் – பெரும் பரபரப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் இன்று மாலை 6 மணி முதல் மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோமதி விஜயரங்கம் தலைமையில் போராட்டம்:
இதையடுத்து, மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோமதி விஜயரங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை மெயின் ரோட்டில் அண்ணா சிலை அருகே சாலையில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பல மணி நேரத்துக்கு மேல் முடங்கியது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மின்தடை மற்றும் சாலை மறியல் காரணமாக இன்று மாலை அந்தப் பகுதி பெரும் பரபரப்பாக மாறியது.
No comments
Thank you for your comments