Breaking News

திருவிழா கோலாகலம்: ஆர்.வி. ரஞ்சித் குமார் ஏற்பாட்டில் ஸ்ரீ மூலஸ்தம்மன் ஆலய ஆடி விழா

காஞ்சிபுரம், ஆகஸ்ட் 4:

முத்தியால்பேட்டை ஸ்ரீ மூலஸ்தம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் ஆடி மாத திருவிழா, இந்தாண்டு 25-வது ஆண்டாக, ஆஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.வி. ரஞ்சித் குமார் அவர்களின் ஏற்பாட்டில் கோலாகலமாக நடைபெற்றது.



திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பம்பை சிலம்பு ஆட்டம், பேண்ட் வாத்தியங்கள், வானவேடிக்கைகளுடன் திருவீதி உலா நடந்து, பக்தர்கள் தீபா ஆராதனை செய்து வழிபட்டனர்.


விழாவில், அமைப்புச் செயலாளர் கே. கோபால், அவைத்தலைவர் ஜோதி ராமன், மாவட்ட பொருளாளர் ஏ. வஜ்ரவேலு, துணைச் செயலாளர் ஷகிலா, பேரூராட்சி செயலாளர் ஜெயகாந்தன், நிக்சன் எம்ஜிஆர் மன்றம் பூக்கடை ஜகா, பொதுக்குழு உறுப்பினர் ஏ. பழனி, ஒன்றிய செயலாளர்கள் அருண், கோவிந்தராஜ், மாகறல் சசி, வல்லம் பழனி, சந்திரசேகர், கலியனூர் தேவன், டில்லி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments