பொதுமக்கள் நலன்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - காஞ்சிபுரம் ஆட்சியர் வேண்டுகோள்
காஞ்சிபுரம், ஆக.31:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏகனாம்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நலன்காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாம்களில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகள் முழுமையான உடல் ஆரோக்கியப் பிரசோதனைகள், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்,மின் இதய வரைபடம்,எக்கோ, அல்டிரா சவுண்ட் ஸ்கேன்,எக்úஸரே முதலியவையும் பரிசோதிக்கப்படுகிறது.
காசநோய்,தொழுநோய் மற்றும் ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் நடைபெறுகிறது.15 துறைகளை சார்ந்த நிபுணர்களும் மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
ஆட்சியர் ஆய்வின் போது சுகாதாரப்பணிகள் துறையின் இணை இயக்குநர் நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் த.ரா.செந்தில் ஆகியோர் உட்பட அரசு அலுவரர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் பலரும் உடன் இருந்தனர்.

No comments
Thank you for your comments