Breaking News

காஞ்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் -ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம், ஜூலை 17:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா அரங்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா அரங்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.முகாமினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு அங்கு அமைக்கப் பட்டிருந்த மருத்துவ முகாமை ஆய்வு செய்தார்.

பின்னர் இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்படும் இடத்தினையும் பார்வையிட்டார். 

இதனைத் தொடர்ந்து முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.முகாமில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி,கழிப்பறை வசதி, இருக்கை வசதி ஆகியன செய்யப்பட்டிருக்கிறதா எனவும் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது காஞ்சிபுரம் வட்டாட்சியர் எஸ்.ரபீக் உட்பட அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments