திருப்பெரும்புதூரில் தொலைந்த கைப்பையை பத்திரமாக ஒப்படைத்த போக்குவரத்து தலைமை காவலர் – பொதுமக்கள் பாராட்டு!
பயணத்தின் போது, திருப்பெரும்புதூர் அருகே, ரேகா பணம், நகை மற்றும் செல்போன் ஆகியவை அடங்கிய தனது கைப்பையை தவறவிடுகிறார். இந்நிலையில் அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் குமரன், அந்த கைப்பையை கண்டெடுத்து பாதுகாப்பாக வைத்தார்.
பணம், நகை மற்றும் செல்போனை சரிபார்த்த ரேகா, உரிய முறையில் பெற்றுக் கொண்டு காவலர் குமரனுக்கு நன்றியை தெரிவித்தார்.
போக்குவரத்து தலைமை காவலரின் நேர்மையும், பொறுப்புணர்வும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
No comments
Thank you for your comments