Breaking News

தேவிரியம்பாக்கத்தில் இலவச யோகா பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா

காஞ்சிபுரம், ஜூலை 11:

காஞ்சிபுரத்தை அடுத்த தேவரியம்பாக்கம் ஊராட்சியில் கிராமிய சேவைத் திட்ட தொடக்க விழாவின் ஒரு பகுதியாக இலவச யோகா பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கியது.


உலக சமுதாய சேவை சங்கம் மற்றும் ரெனால்டு நிசான் நிறுவனம் ஆகியன இணைந்து தேவரியம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் கிராமிய சேவைத் திட்டத்தினை தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து 7 மாதங்களுக்கு நடைபெறவுள்ள இத்திட்டத்தின் தொடக்க நிகழ்வாக இலவச யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

தொடக்க விழாவிற்கு தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.எஸ்.கோவிந்தராஜன், உமா மகேசுவரன்,டி.எஸ்.குமார்,கீர்த்தி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

யோகா பயிற்சியாளர்கள் சற்குணம் மற்றும் சிவசங்கரி ஆகியோர் யோகா பயிற்சியை நடத்தினார்கள். யோகா பயிற்சியின் போது நோயற்ற வாழ்வு, முதியோரை பாதுகாத்தல்,சுற்றுப்புற சுகாதாரம், குடும்ப அமைதி, மனித நேயம் ஆகியன குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மருத்துவர் ஆர்.வசுமதி தலைமையில் இலவச பொது மருத்துவ முகாமும்,புவனேசுவரி தலைமையில் மனநல ஆலோசனை முகாமும் நடைபெற்றது.

நிறைவாக திருச்சி அருமைக்கலை காரியாலயத்தின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments