Breaking News

ஜூலை 18 – காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலனுக்காக சிறப்பு கூட்டம்

 காஞ்சிபுரம், ஜூலை 15:

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 18 (வெள்ளிக்கிழமை) அன்று விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திரு.கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

📅 நாள்: 18.07.2025 (வெள்ளிக்கிழமை)

🕥 நேரம்: காலை 10.30 மணி

📌 இடம்: மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம்

🔍 கூட்டத்தின் சிறப்பம்சங்கள்:

  • வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள்,
  • அரசுத் துறைகளின் முக்கிய அலுவலர்கள் பங்கேற்று
  • விவசாயம் சார்ந்த அறிவுரைகள், திட்டங்கள், மற்றும் தகவல்கள் வழங்கப்படும்.
  • விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் தங்களது கோரிக்கைகள், சிக்கல்கள் குறித்து நேரில் கூறலாம்.
📣 விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்துகொண்டு, இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது நலனுக்கான தீர்வுகளை பெறுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments

Thank you for your comments